Saturday, March 23, 2013

கருவேப்பிலை Curry Leaf (Murraya koenigii)


கருவேப்பிலை



நல்ல பசி எடுக்க...
ஒரு கைபிடி கருவேப்பிலையை எடுத்து மைபோல் அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலக்கி வெறும் வயிற்றில் தினமும் குடித்துவர நல்ல பசி எடுக்கும்.

விளக்கெண்ணையையும், சுண்ணாம்பையும் சேர்ந்து குழப்பி இரும்பு கரண்டியிலிட்டு அடுப்பில் காயச்சி மிதமான சூட்டில் வெளிப்புறம் தடவினால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு நீங்கும்.

பித்தம் போன்ற நோயினால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சப்பழ இலையை காயவைத்து அதனுடன் மிளகாய், உப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு எண்ணெயில் வறுத்து, பொடி செய்து சாப்பிட்டால் நோய் குணமாகும்.

லேசான இரும்புக்காயம் பட்டவர்கள் வரமிளகாயை அரைத்து வேப்பெண்ணெய் சேர்த்து வதக்கி சூடான நிலையில் காயம்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்து, பின் சிறு அளவு மிளகாயை அதிலேயே வைத்து கட்ட வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்தால் காயம் ஆறும்.

மூக்கினுள் என்ன காரணத்தால் ரத்தம் வடிய நேர்ந்தாலும், படிகாரத்தைத் தூள் செய்து, தண்ணீரில் கரைத்து மூக்கின் உள்ளும், புறமும் நன்றாகத் தடவினால் ரத்தக் கசிவு நின்றுவிடும்.

No comments:

Post a Comment