Saturday, March 23, 2013

வெற்றிலை PIPER BETEL


வெற்றிலை PIPER BETEL


வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது . இக்கொடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. பயிரிடப்படும் கொடிதான்; இது தானாக எங்கும் விளைவதில்லை; வெற்றிலை வளரும் இடத்தைக் கொடிக்கால் என்று கூறுவர் . பெரும்பாலும் தமிழ் நாட்டில் அது அகத்திச் செடிகளின் மேல் படர விட்டு வளர்க்கப்படுகிறது .இது செடியைச் சுற்றிப் படர்வதால் நாகவல்லி என்றும் பெயர் பெற்றுள்ளது. தென்னந்தோப்புகளில் இதை ஊடுபயிராகவும் விளைவிப்பதுண்டு.

நாகவல்லி சிலை ஒரிசாவின் அனைத்து ஆலயங்களிலும் இடம் பெற்றுள்ளது .முக்கியமாக கோநார்க்கில் அதிகம் உள்ளது.

 வெற்றிலை வெறும் இல்லை மட்டுமன்று; மூலிகை மட்டுமன்று. .அது மிகுந்த சமூக மதிப்பு வாய்ந்தது. தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது அந்தக்காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையைத் தாம்பூலமாகப் பயன்படுத்தினர் அந்த வெற்றிலையை மடித்துக் கொடுப்பதற்காக அமைச்சர் மதிப்பில் ஓர் அதிகாரியும் அருகில் இருப்பார் .அவருக்குச் சில சமயம்
 அமைச்சரை விட மதிப்பு அதிகம் உண்டு; அவருக்கு பெயரே அடைப்பக்காரர். அரியநாயகம் என புகழ்பெற்ற மதுரை நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பக்காரராக இருந்ததாகக் கூறப்படுகிறது .எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து விட்டால் போதும்; அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரிதான். இன்றும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) மாற்றிக்கொள்வது என்றுதானே கூறுகிறோம் . நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றிலைக்கு உண்டு .தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை; வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடும் தமிழர் வாழ்வில் இல்லை . ஏன் என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை செயல்களிலும் உபயோகித்து வருகிறோம்.
 கடவுளை மறுப்போர் கூட இதை ஏன் என்று கேட்கவில்லை .
 வெற்றிலை என்பதே பன்மைதான்; வெற்றிலைகள் என்று கூறப்படுவதில்லை. அதை என்றும் ஒன்றாகவும் உபயோகிப்பதில்லை .
 .
 வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு .
 வெற்றிலையைக் கொண்டு ஆருடம், சோதிடம்கூடப் பார்ப்பதுண்டு .மாந்திரீகத்திலும் இதற்குத் தனி இடம் உண்டு .

 மூலிகையின் பெயர் -: வெற்றிலை.
 தாவரப் பெயர் -: PIPER BETEL.
 தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

 தாம்பூலம், நாகவல்லி, வேந்தன் என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு.

 வெற்றிலை வெப்பம் தரும்; உமிழ்நீர் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; காமத்தைத் தூண்டும்; நாடி நரம்பை உரமாக்கும்; 
நறுமணம் அளிக்கும்.

 வெற்றிலைச் சாற்றுடன் பாலையும் கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் கஸ்தூரி, கோரோசனை ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொடுக்கச் சளி, இருமல், மாந்தம், இழுப்பு குணமாகும். பல மருந்துகளுக்கு வெற்றிலை அனுபானமாகும் .
 ( உட்செல்லும் மருந்தோடு இதையும் உண்பதால் வீரியம் மிகும்)

 ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து. வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

 கும்பகோணம் வெற்றிலையும், இசையும் பெயர் பெற்றவை .
 நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும்.

 The chief constituent of the leaves is a volatile oil varying in the leaves
 from different countries and known as Betel oil. It contains two phenols,
 betel-phenol (chavibetol) and chavicol. Cadinene has also been found. The
 best oil is a clear yellow colour obtained from the fresh leaves.
 Medicinal Action and Uses---The leaves are stimulant antiseptic and
 sialogogue; the oil is an active local stimulant used in the treatment of
 respiratory catarrhs as a local application or gargle, also as an inhalant
 in diphtheria. In India the leaves are used as a counter-irritant to
 suppress the secretion of milk in mammary abscesses. The juice of 4 leaves
 is equivalent in power to one drop of the oil.

 இரண்டு வெற்றிலையோடு ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி, தேங்காய்த் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு கால் லிட்டர் ஆகக் குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து மூன்று வேளை உணவுக்கு முன்பு அருந்தினால் குணமாவதாகக் கூறப்படுகிறது.

 Paan - Urdu/Hindi/Bengali,
 Taambuul and Nagavalli - Sanskrit.
 Tamalapaku - Telugu
 Vidyache pan - Marathi,
 Veeleyada yele - Kannada,
 Vettila - Malayalam

 உணவுக்குப்பின் வெற்றிலையை அளவாக உபயோகிக்க உண்ட உணவு ஜீரணமாகும் .ஜப்பானிய டீ விருந்து முறை போல் வெற்றிலை, பாக்கு,சுண்ணாம்பு இவைகளைச் சேர்த்து அந்தக்காலத்து மனிதர்கள் போடும் விதமே ஒரு தனியான கலையாகும்; இதை மிகவும் ரசித்துச் செய்வர்.
 பின்புறம் இருக்கும் நரம்பை நீக்கிவிடவேண்டும்;அதில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.வெற்றிலை, பாக்குடன் சேரும்போது சுண்ணாம்பு உண்ணத்தக்கதாக மாறிவிடுகிறது; உடலுக்குச் சுண்ணாம்பு சத்தும் கிடைத்து விடுகிறது . அந்தக்காலத்து பாட்டிகளுக்கு நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்யும் இந்தக்காலத்து நாகரிக மனிதரை விடப்பற்கள் வலுவாக இருந்தன.

 இன்னும் வெற்றிலையின் மகிமை சொல்லச் சொல்ல விரியும்;

’வெற்றிலை போடுவத்தல்ல, தரிப்பது’ என்பர்.அதுவே அதன் மதிப்பை உயர்த்தும் .

No comments:

Post a Comment